Wednesday, May 21, 2014
Vishnu - அரங்கனின் நாமம் மோக்ஷ பிரதானம்
அரங்கனின் நாமம் மோக்ஷ பிரதானம்
அதனை தினமும் செபித்திடுவோம்
இருவடிகளை நம் இதயத்தில் வைத்து
அனுதினமும் நாம் துதித்திடுவோம்
(அரங்கனின் நாமம்)
வீணில் தருக்கம் வாதங்கள் என்ற
வாழ்வை நாமும் மாற்றிடுவோம்
தூணைப்பிளந்து சிறுவனைக் காத்த
தேவனை நாம் போற்றிடுவோம்
தானேயான திருமேனியனின்
துணையை நாமும் கொண்டிடுவோம்
ஞானகுருவின் நிர்மல ரூபத்தை
நெஞ்சினிலே நாம் கண்டிடுவோம்
(அரங்கனின் நாமம்)
கண்கள் காணும் காட்சியில் எல்லாம்
கண்ணனை நாமும் கண்டிடுவோம்
எண்ணம் முழுவதும் அவனை நிறைத்து
அன்பு வழியில் சென்றிடுவோம்
மண்ணை விண்ணை அவன் அளந்தானே
மனதை அளப்பது காரியமா
திண்ணம் திண்ணம் அவனருள் இருந்தால்
தொடரும் பயணம் தைரியமாய்
(அரங்கனின் நாமம்)
x
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment