இராமானுச நூற்றந் தாதியினை
ஒருமுறையேனும் படித்திடுவோம்
தீவினை நீக்கி நன்மை பயத்திடும்
தாளிணை நாமும் பிடித்திடுவோம்
தானுகந்த திருமேனியைக் காண
திருப்பெரும் புத்தூர் சென்றிடுவோம்
ஞான பூரண நாதனின் மனதை
நற்றமிழ் கவியால் வென்றிடுவோம்
அனைவரும் உய்ய ஒரு மந்திரத்தை
உயரவே நின்று அவன் சொன்னான்
இனிவரும் எவரும் ஈடில்லைஎன
உயரவே உயர்ந்து அவன் நின்றான்
No comments:
Post a Comment