அண்ணல்கையில் ஏந்திநிற்கும் ஐந்தாயு ங்களிலும்
இதுமுதன்மை யான ஆயுதம்
அன்பர்களின் பயம்நீக்கும் எடுத்ததெலாம் ஜயமாக்கும்
அருளேவடி வான சுதர்சனம்
எண்ணிறந்த சூரியர்கள் ஒளியனைத்தும் தானடக்கி
ஒளிசிந்தி நிற்கும் அற்புதம்
இவனருளால் பரமபதம் ஏகும்வழி எளிதாகும்
ஐயமில்லை இது சத்தியம்
பெண்ணாசை மண்ணாசை பொன்னாசை இம்மூன்று
பிணியறுக்கும் இதன் மருத்துவம்
பண்டுதொட்டு இன்றுவரை பிரத்யட்ச தெய்வமாக
பக்தர்களை காக்கும் அதிசயம்
விண்ணதிர மண்ணதிர வருகின்ற தடையனைத்தும்
வேரறுக்கும் வீர சக்கரம்
வேண்டியதை தந்திடவே விளங்குமது வலிமையோடு
வாசுதேவ னின்வலக் கரம்
No comments:
Post a Comment