எதிராஜனைக் காண கண்நூறு வேண்டும்
அவன்புகழைப் பாட பலஜன்மம் வேண்டும்
இதுவன்றி எனக்கு வேறென்ன வேண்டும்
என்றுமென் நெஞ்சில் அவன்வாழ வேண்டும்
அவன்பார்வை பார்க்க துன்பங்கள் மறையும்
அன்றாட வாழ்வின் சுமைகூட குறையும்
தவறான பாதைகள் சரியாக மாறும்
சிந்தையில் அவன்நாமம் எந்நாளும் ஊறும்
மெய்ஞானம் காண எளிதான வழியுண்டு
தபஜபங்கள் செய்ய வனம்போக வேண்டாம்
நெய்விளக்கு ஏற்றி அவன்நாமம் சொல்ல
நலம்யாவும் தானாக நமைவந்து சேரும்
No comments:
Post a Comment