பல்லவி
பதமலர் பணிந்தால்
உய்ந்திடலாம் சிவ
பாலகனின் ஜகத்பரி
பாலகனின்
அனுபல்லவி
மதிசடை நாதனின்
இளைய குமாரனின்
மலைமே லமர்ந்த
வள்ளிம ணாளனின்
சரணம்
காமமெனும் பேய்
தன்வசப்பட்டு
கிடைத்த வாழ்வினை
அழித்திடுவார்
குருவிழி
காட்டும் நல்வழி மறந்து
குருவினை யேயவர்
பழித்திடுவார்
ஓமெனும்
பிரணவத்தின் உட்பொருள் அவனே
அவனடி மனமே
பணிந்து விடு
அவன்பெயர் சொல்லி
சொல்லியே காயாய்
இருக்கும் நீயும்
கனிந்து விடு
No comments:
Post a Comment