பல்லவி
இராமன் என்றால் எனக்கு மிகப் பிரியமே - அந்த
அண்ணலின் பெயர் ஒன்றே அநுகூலமே
அனுபல்லவி
தாமரைப் பாதங்கள் சிரம் தரித்தால் - இந்தச்
சென்மமும் சாபல்யம் அடைந்திடுமே
சரணம் 1
மண்டிய இருளவனும் அகற்றி விட்டான் - என்
மனதினில் தருமத்தை புகட்டி விட்டான்
கண்டதெலாம் தானாய் காட்சி தந்தான் - அவன்
கமலப் பதங்களையே போற்றி நின்றேன்
(இராமன் என்றால்)
சரணம் 2
எண்ணங்களை அவனும் திருத்தி வைத்தான் - என்
இதயத்தில் தன்னையுமே இருத்தி வைத்தான்
அண்டவிடாமல் துயர் தள்ளி வைத்தான் - அவன்
இருவடிக்கே உயிரை எழுதி வைத்தேன்
(இராமன் என்றால்)
No comments:
Post a Comment