என்றும் அவன்பெயர் என்நா விருக்க
ஒன்றாம் படியே நீயெனக் கருள்வாய்
இரவுபகல் அவன் நினைவாய் இருக்க
இரண்டாம் படியே நீயெனக் கருள்வாய்
வேண்டிய படியென் விரதங்கள் முடிய
மூன்றாம் படியே நீயெனக் கருள்வாய்
ஞானத்தின் வடிவை நான்கண் டிடவே
நான்காம் படியே நீயெனக் கருள்வாய்
சந்ததம் அவனென் சிந்தையில் இருக்க
ஐந்தாம் படியே நீயெனக் கருள்வாய்
ஆரியங் காவய்யன் இணையடி காண
ஆறாம் படியே நீயெனக் கருள்வாய்
சூழிருள் அகற்றும் சோதியைக் காண
ஏழாம் படியே நீயெனக் கருள்வாய்
கேட்டதை யருளும் கண்ணில் நான்விழ
எட்டாம் படியே நீயெனக் கருள்வாய்
துன்பங்கள் தீர்க்கும் தேவனைக் காண
ஒன்பதாம் படியே நீயெனக் கருள்வாய்
நித்திய சத்திய நாதனைக் காண
பத்தாம் படியே நீயெனக் கருள்வாய்
பதநிழல் நிறுத்திப் பாவங்கள் தொலைக்க
பதினொன்றாம் படியே நீயெனக் கருள்வாய்
தனக்குநே ரில்லா தேவனைக் காண
பனிரெண்டாம் படியே நீயெனக் கருள்வாய்
அதிசுந் தரனின் அழகினைக் காண
பதிமூன்றாம் படியே நீயெனக் கருள்வாய்
விதியை வெல்ல வேண்டியே வந்தேன்
பதினான்காம் படியே நீயெனக் கருள்வாய்
கதியிலை எனக்கு காவலும் அவனே
பதினைந்தாம் படியே நீயெனக் கருள்வாய்
ஏதும் செய்துநான் தரிசனம் கண்டிட
பதினாறாம் படியே நீயெனக் கருள்வாய்
போதும் போதுமென பேரருள் பருகிட
பதினேழாம் படியே நீயெனக் கருள்வாய்
இதுவரை எனது இனிமேல் உனது
பதினெட்டாம் படியே நீயெனக் கருள்வாய்
No comments:
Post a Comment