சபரிமலை ஆளுகின்ற சுந்தரனைக் காண
துதித்தவனை
நானணிந்தேன் துளசிமணி மாலை
ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை
கழுத்திலதை போட்டதுமவன்
நினைவு வந்தது
கடுமையான விரதம்
தாங்கும் துணிவு வந்தது
பழுதில்லாத பக்தி
பிரேமை பணிவு வந்தது
பாவிநெஞ்சில்
உன்னருளால் கனிவு வந்தது
ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை
சபரிமலை ஆளுகின்ற சுந்தரனைக் காண
துதித்தவனை
நானணிந்தேன் துளசிமணி மாலை
நோயிலாமல் வாழநீயும்
அருள் தருவாயே
நாடிஎங்கும்
செல்லாமல் பொருள் தருவாயே
நேயமுடன் உதவிசெயும்
மனம் தருவாயே
நின்னழகு தரிசனம்நீ தினம் தருவாயே
ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை
சபரிமலை ஆளுகின்ற சுந்தரனைக் காண
துதித்தவனை
நானணிந்தேன் துளசிமணி மாலை
ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை
No comments:
Post a Comment