Wednesday, May 21, 2014

Vishnu - அரங்கனைச் சேவிக்கப் போகின்றேன்

அரங்கனைச் சேவிக்கப் போகின்றேன் அவன்
அடியிணை  சேவிக்கப் போகின்றேன்
இரங்குதலுக்கு ஏனித்தனை சமயம்  என்று
ஐயத்தைத் தெளிவிக்கப் போகின்றேன்

பிறைநுதல் அன்னையினைக் கண்டு எனது
பணிவினைச் சமர்பிக்கப் போகின்றேன்
குறைகளைச் சொல்லிடப் போகின்றேன் ஒரு
கூடையருள் பெற்றுவரப் போகின்றேன்

உடையவரைக் கண்டுவரப் போகின்றேன் அவர்
அடிமலர் தொழுதுவரப் போகின்றேன்
விடையில்லாப் பலகேள்வி களுக்கு அவரிடம்
விளக்கம்  கேட்டுவரப் போகின்றேன் 

பெரிய திருவடிகளைத் தரிசித்து - என்னுடைய
விண்ணப்பம் தந்துவரப் போகின்றேன்
அரங்கனை ஒருமுறையேனு மிங்கு - அவரை

அழைத்துவரும் படிகேட்கப் போகின்றேன்

No comments:

Post a Comment