கண்ணன் வருகின்ற நேரம் - அவன்
குழலும் ஒலிக்கின்ற நேரம் - இனி
எண்ணம் அவன்மீது கூடும் - என்
இதயம் அவன்பெயரைப் பாடும்
நயனம் அவனழகைப் பருகும் - என்
நெஞ்சம் நெய்யாக உருகும் - அவன்
மயக்கும் தெய்வீக அழகில் - என்
மனதில் ஸ்ரீராகம் ஒலிக்கும் -இந்த
கயிறு அரவாகும் பொழுதில் – அவன்
கண்கள் கவிதைகள் எழுதும்
(கண்ணன் வருகின்ற )
மடியில் தலைவைத்துக் கிடப்பேன் – கண்
மூடியே ராதைநான் நடிப்பேன் – என்
உடலோ அவன்கைகள் தேடும் – கனி
இதழோ இதழ்காண ஏங்கும் – என்னை
படிக்க நூல்போல பிரிப்பான் – அவன்
படித்த பின்னாலே சிரிப்பான்
(கண்ணன் வருகின்ற )
அவனைச் சேர்கின்ற
பொழுது – என்
உயிரும் மலர்கின்ற
பொழுது – ஒரு
கவலை இல்லாத இளமை
– அவன்
கண்கள்
என்றென்றும் புதுமை – ஒரு
உவமை இல்லாத உறவு
– இனி
என்றும் கூடாது
பிரிவு
(கண்ணன் வருகின்ற )