Wednesday, May 21, 2014

Krishna - அண்டமரர் கொண்டாடும் ஆதியே

அண்டமரர் கொண்டாடும் ஆதியே
அருமறையும் அறிந்திடா அனாதியே
மண்டிய இருள்போக்கும் சோதியே
மலர்மகளின் காதல் பாதியே 
அண்டியவர் துயர்நீக்கும் நாதனே
உலகுய்ய கீதைசொன்ன போதனே
புண்டரீக தாளிணையை நாடுவேன்
பண்தமிழில் பாட்டெழுதிப் பாடுவேன்

வேண்டுவேன் சீரருள் உன்னிடம்
விலகாத அன்புகொள் என்னிடம்
ஆண்டைநீ நானுந்தன் அடிமையே
எனைக்காத் தருள்வதுன் கடமையே
தூண்டுவா றற்றபெருஞ் சோதியே
திரும்பவும் உன்னைநான் கேட்பது
மீண்டுமோர் சன்மமுண் டென்றிடின்

மலரடிகள் மறவாமல் வைத்திடு

No comments:

Post a Comment