எதிராசன்
திருவடிகள் எந்நாளும் வாழ்க
இடையிலவ னணிந்த
செவ்வாடை வாழ்க
அதியழகா னதிரு
முகமண்டலம் வாழ்க
இருசெவி ஆடிடும்
குண்டலங்கள் வாழ்க
மதிமயக்கும்
முறுவல் மலருமிதழ் வாழ்க
மலர்விழிகள்
வாழ்க முத்திரையும் வாழ்க
கதியென்று
வந்தாரை காத்திடும் கருணைக்
கதிரவன்
வாழ்கஅவன் அடியார்கள் வாழ்க
No comments:
Post a Comment