Wednesday, May 21, 2014

Vishnu - தசாவதாரம்

வேதம் காத்தமீனாய் பின்னர்
வெற்பை ஏற்ற உருவாய்
பூமி சுமந்தவ ராகம் பின்னர்
பாலன் பணிந்ததொரு அரியாய்
பாதம் உலகளந்த குறளாய்
பரசுராம னென்னும் முனியாய்
சீதையை மீட்க இலங்கைக்
கோனை அழித்த நரனாய்
ராதை மனத்து கண்ணன் பல
ராமன் என்னுமவன் அண்ணன்
ஓதக் கடல்சினக்கும் ஊழிக்
காலம் வரும் கல்கியாய்
காதல் கனிந்தவன் கருணை
கருது வோர்கொரு அடியனாய்
பாதம் பணிந்தவர் கருளும்

பரமனை நாமும் துதிப்போம் 

No comments:

Post a Comment