பாறைக்குள் தண்ணீரைத் தேரைக்கு வைத்திட்ட
முருகனின் கருணையைப் பாரு - அவன்
போலிங்கு எவருண்டு கூறு?
ஆதார ஸ்ருதியான ஓம்கார ஒலியாக
அவனும் ஒலிப்பதைக் கேளு - அந்த
ஒலியில் பிறந்ததுதான் நாலு
தினம்தோறும் அவன்நாமம் சரவண பவநாதம்
தெவிட்டாத தேனாறாய் செவிக்குள்ளே மோதும்
அனல்பட்ட மெழுகாக வினையிங்கு கரைந்திடும்
அடியவர்கள் இல்லத்தில் அவனருள் நிறைந்திடும்
பாறைக்குள் தண்ணீரைத் தேரைக்கு வைத்திட்ட
முருகனின் கருணையைப் பாரு - அவன்
போலிங்கு எவருண்டு கூறு?
ஆதார ஸ்ருதியான ஓம்கார ஒலியாக
அவனும் ஒலிப்பதைக் கேளு - அந்த
ஒலியில் பிறந்ததுதான் நாலு
No comments:
Post a Comment