தீபம் எரியுது ஜோதி தெரியுது
சாயியின் உருவமும் தெரிகிறது .
பாபம் களையும் நாத வடிவாம்
பாபா இருப்பதும் புரிகிறது
உன்பெயர் சொல்லி இனித்திடவே என்
இதழ்களும் இங்கே துடிக்கிறது
கண்ணீர்த் துளியால் கால்களைக் கழுவ
கண்களும் ஆசைப் படுகிறது
(தீபம் எரியுது ஜோதி தெரியுது )
உன்னை நினைத்து உருகிய உள்ளம்
போதும் போதும் என்கிறது
அன்னையின் செவியில் எந்தன் குரலும்
விழவில்லை யாவெனக் கேட்கிறது
(தீபம் எரியுது ஜோதி தெரியுது )
இதுவரை நானும் எனக்கென உன்னை
எதுவும் கேட்டது இல்லையடா
விதிமுடிந்தால் அது சீரடியில் எனும்
வரமொன்றை நீ தந்திடடா
(தீபம் எரியுது ஜோதி தெரியுது )
No comments:
Post a Comment