பல்லவி
அன்னை யென்றால் அது கற்பகமே – அவள்
அன்பினில் அகிலமே
உட்படுமே
அனுபல்லவி
முன்னை வினைகளையே
தீர்த்துவிடும் – அவள்
மரகத மாணிக்க
பொற்பதமே - அம்மா
சரணம் 1
அன்பைப்
பெருக்கியெனை ஆட்கொண்டவள் – அவள்
அருளின்
எல்லையெனப் பேர்கொண்டவள்
என்புருகி இதயம்
இளகியே நான் – அவள்
பொன்பதம்
அடைந்திட ஆசைகொண்டேன் - அம்மா
சரணம் 2
வேதாந்த விளக்கே
நான் மறைப்பொருளே – நல்
வாக்காகி மனமானக்
கருப்பொருளே
ஓமென்னும்
பிரணவத்தின் உட்பொருளே – என்னைப்
பாராமல்
இருப்பதுமேன் கற்பகமே - அம்மா
சரணம் 3
என்னது யானென்னும்
அகந்தையறும் – நாள்
என்றுவரும் என்று
நானறியேன்
கன்றுக்குச்
சேதாபோல் கனிந்திறங்கி – என்னை
கருணையுடன்
காத்தருளு கற்பகமே - அம்மா
No comments:
Post a Comment