எந்தனுள்ளம் இன்றுவரை
இப்படி நெகிழ்ந்ததில்லை
உனைக்கண்டு
மகிழ்ந்ததுபோல் என்றுமே மகிழ்ந்ததில்லை
எந்தமிழும் இதுபோலே மழையெனப் பொழிந்ததில்லை
உண்மையில் என்நாவும்
எவரையும் புகழ்ந்ததில்லை
உலகிலே உனைப்போல
இங்கின்று எவருமிலை
இலகுவாக
வரமருளும் இதயமும் எவர்க்குமில்லை
அலகில் சோதியனே
உன்அடி நான்பணிந்தேன்
விலகிடா பக்தி
தந்தே வழித்துணை ஆக வாநீ
கல்லான
பெண்ணுக்கு கருணையால் வாழ்வளித்தாய்
வில்கொண்டு
அன்றிலங்கை வேந்தனை நீஅழித்தாய்
அல்குல்
போதையிடம் அடிமை ஆனவென்னை
நல்வழிப்
படுத்துவதும் நம்பியே உனக்கரிதா?
No comments:
Post a Comment