உன்னை நினைத்து தலையணை அடியில்
உன்படம் வைப்பேனே (2)
உன்பெயர் சொல்லி உன்னுரு கண்டே
உறங்கிடச் செல்வேனே
கனவில் வரும் கண்ணா நீயொரு நாள்
நனவில்வரு வாயோ சொல்லிவிடு
உன்னை நினைத்து தலையணை அடியில்
உன்படம் வைப்பேனே
உன்பெயர் சொல்லி உன்னுரு கண்டே
உறங்கிடச் செல்வேனே
குட்டிக் கரங்களினால் என்னை
தட்டியெழுப்பிக் களித்திடுவான் (2)
கண்களில் உள்ள உறக்கத்தை
குழலை ஊதிக் கலைத்திடுவான்
என்றும் உந்தன் பக்தியில் பனியாய்
உருகியே கரைவேனே
உன்பெயர் சொல்லி உன்னுரு கண்டே
உறங்கிடச் செல்வேனே
கனவில் வரும் கண்ணா நீயொரு நாள்
நனவில்வரு வாயோ சொல்லிவிடு
உன்னை நினைத்து தலையணை அடியில்
உன்படம் வைப்பேனே (2)
உன்பெயர் சொல்லி உன்னுரு கண்டே
உறங்கிடச் செல்வேனே
துள்ளியே யோடி வந்திடுவான்
தூக்கச் சொல்லி கெஞ்சிடுவான்
தூக்கியே மடியில் வைத்தவுடன்
தளிர்கரத் தாலே அணைத்திடுவான்
கல்லையும் கனிய வைத்திடும் புல்லாங்
குழலுக்கு உரியவனே
உன்பெயர் சொல்லி உன்னுரு கண்டே
உறங்கிடச் செல்வேனே
கனவில் வரும் கண்ணா நீயொரு நாள்
நனவில்வரு வாயோ சொல்லிவிடு
உன்னை நினைத்து தலையணை அடியில்
உன்படம் வைப்பேனே (2)
உன்பெயர் சொல்லி உன்னுரு கண்டே
உறங்கிடச் செல்வேனே
ஒருசில சமயம் யோசித்து
உள்ளம் சற்று கலங்குதடா
பிரிவை எண்ணி என்நெஞ்சும்
பலமுறை துடிக்க மறக்குதடா
எண்ணம் இதுபோல் இருக்கையில் எப்படி
உறங்கத் தோன்றுமடா
கண்ணுறங்காமல் உந்தன் நினைவில்
காலையும் புலர்ந்ததடா
No comments:
Post a Comment