அவனடி தொழுதிட எத்தனை கரங்கள்
வரங்களை வேண்டி வளங்களை வேண்டி
வணங்கியே நிற்கும் எத்தனை மனங்கள்
(அரங்கனைக் காண...)
அரங்கம் அன்றியோர் கோவிலும் இல்லை
அரங்கன் அன்றியோர் கடவுளும் இல்லை
திருவடி கண்டால் தொல்லைகள் தீரும்
திருமகள் அருளால் பொருள்களும் சேரும்
(அரங்கனைக் காண...)
மறுபிறப்பென்று மாதவன் பணித்தால்
மறுபடி மறுபடி அரங்கினில் பிறப்பேன்
திருவடியதனைச் சிந்தையில் நிறுத்தி
சந்ததம் அவனது நினைவில் இருப்பேன்
(அரங்கனைக் காண...) வீயார்