Wednesday, May 21, 2014

Rama - ராம நாமம் தினம்

ராம நாமம் தினம் உரைத் திடுவாய்  
தாம தம்செய் யாது துவங் கிடு வாய் மனமே


பாவ ங்களைப் போக்கி பாவன மாய் ஆக்கும்
பாத நிழலில் வைத்து  பரிவுடனே காக்கும் 
சேவித்த மனதினைஸ்ரீ வைகுந்தம் சேர்க்கும்
நான்மறையும் தேடும் நாதன் ராமன் நாமம்

கானகம் போய் நாமும் கடுந்தவம் புரிய வேண்டாம்
காதிலும் கழுத்திலும் மணிகளை அணிய வேண்டாம்
ஞான பரி பூரணனின் நாமம்நினைத் தால் போதும்

நானில த்தின் சுகமெல்லாம் நம்மடி வந்து மோதும்  

No comments:

Post a Comment