Tuesday, March 1, 2016

Baba - என் குருநாதா ...

என் குருவென்று உனையன்றி எவரைநான் கொள்வேன்
என் கவிகளிலே உனையன்றி எவரைநான் புகழ்வேன்
என் பயணத்தில் என்னோடு எப்பொழுதும் வருவாய்
என் இருளான காலத்தில் என்னோடு இருப்பாய்

நீ நீர் கொண்டு விளக்கெரித்தாய் அதுவன்று விந்தை
நீ கார் மேகம் தனைத் தடுத்தாய் அதுவன்று விந்தை
உன் பாதத்தில் கோதாவரி அதுவன்று விந்தை
என் தியானத்தில் குடிவந்தாய் அதுவன்றோ விந்தை

என் பயணத்தில் என்னோடு எப்பொழுதும் வருவாய்
என் இருளான காலத்தில் என்னோடு இருப்பாய்
என் குருவென்று உனையன்றி எவரைநான் கொள்வேன்
என் கவிகளிலே உனையன்றி எவரைநான் புகழ்வேன்

அன் றுன்னோடு சீரடியில் இருந்தார்கள் நல்லோர் நான்
அவர் நாமம் என்றென்றும் என் நெஞ்சில் கொள்வேன்
என் உயிர் காலம் முடிகின்ற வேளைக்கு முன்னே
நான் நீ வாழ்ந்த சீரடியில் வாழ்ந்திடவே வருவேன்

என் பயணத்தில் என்னோடு எப்பொழுதும் வருவாய்
என் இருளான காலத்தில் என்னோடு இருப்பாய்
என் குருவென்று உனையன்றி எவரைநான் கொள்வேன்
என் கவிகளிலே உனையன்றி எவரைநான் புகழ்வேன்