ஸாயி என்றாலே தமிழ்தரும் பாட்டு
திருமுக தரிசனத்தில் அகங்குழையும் அவன்
திருப்பெயர் சொல்லிடவே நாவிழையும்
இருந்திடின் இன்னும்பல பிறவிகளே அவன்
இருவடி நிழல்தனில் அவைகழியும் ஸாயி
(திருமுக தரிசனத்தில்...)
உதியெனும் அற்புதத்தை எமக்களித்தான் நேரும்
பிணியெலாம் விலகிடவே வழிவகுத்தான்
விதிவினை எரித்திடவே துனிவளர்த்தான் அவன்
வரங்களை எண்ணியெண்ணி நான்சிலிர்த்தேன் ஸாயி
(திருமுக தரிசனத்தில்...)
துவாரிகா மாயியென்னும் ஒருதலமே சென்று
தரிசனம் செய்தாலே நேரும்நலமே
சுவாசத்தை நிறைத்திருக்கும் ஸாயிபெயரே அதைச்
சொல்லிச்சொல்லி மகிழ்ந்திடும் எந்தனுயிரே
(திருமுக தரிசனத்தில்...)
வீயார்