Wednesday, May 21, 2014

Baba - அழைப்பு வரும் சீரடியிலிருந்து

உள்ளம்தனில் உண்மையான ஆர்வமிருந் தால்தான்
அழைப்புவரும் சீரடியி லிருந்து
கள்ளம்கபட மில்லாத காதல்மனம் கசிந்தால்தான்
அழைப்புவரும் சீரடியி லிருந்து
எல்லோருக்கும் ஒருகடவுள் என்றவனின் ஆசியினால்
அழைப்புவரும் சீரடியி லிருந்து
பிள்ளைகளைப் பார்த்திடவே பாபாதன் மனம்வைத்தால்
அழைப்புவரும் சீரடியி லிருந்து

எத்தனை இடர்பாடு இருந்தாலும் விலகிடுமே
அழைப்புவரின் சீரடியி லிருந்து
உற்றதுணை ஆகிடுவார் நம்முடைய எதிரிகளும் 
அழைப்புவரின் சீரடியி லிருந்து
மடைதிறந்த வெள்ளமென மகிழ்சிகள் பொங்கிடுமே
அழைப்புவரின் சீரடியி லிருந்து
திடம்சேரும் நலம்சேரும் சாயிராமன் திருவருளால் 

No comments:

Post a Comment