நீயுறையும் திருவரங்கம்
நினைத்தாலே வினையாவும்
போய்விடுமே கதிரொளியில்
பனிகரைந்தி டுவதுபோல்
நோய்தீரும் நலம்சேரும்
நினைத்ததெல்லாம் கூடிவரும்
ஆதிமறை தேடுகின்ற
அரங்கத்துப் பெருமாளே
|
கண்ணுள்ளே நின்றவொளிக்
கற்றேஎன் கற்பகமே
விண்ணவர்கள் ஏத்துகின்ற
விலகாத துணையேயுனை
எண்ணியெண்ணி இரவுபகல்
அஞ்சலி செய்யுமிந்தத்
தொண்டனைக்
காத்தருள்வாய்
திருவரங்கப் பெருமாளே
|
ஆதியும் நடுவுமாகி
அந்தமும் நீயாகிப்போனாய்
தீதொழித்து
தர்மம்காக்க
தசாவ தாரமெடுத்தாய்
ஞானமே தவமேயுன்னை
நித்தமும் வணங்குமிந்த சேயனைக் காத்திடுவாய்
ஸ்ரீரங்கப் பெருமாளே
|
ஆண்டாளும் தான்மணந்த
அளவிலா திருவருளே
ஆழ்வார்கள் துதித்திட்ட
தெவிட்டாத தெள்ளமுதே
தூண்டுவா ரில்லாத
தனிப்பெரும் ஜோதியே
ஆண்டையே சரண்நீயே
அரங்கத்துப் பெருமாளே
|
Wednesday, May 21, 2014
Vishnu - நீயுறையும் திருவரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment