மாதவனின் அடிவணங்கி வாழ்ந்திடுவோமே அந்த
மலர்மகளின் அருள்மழையில் நனைந்திடுவோமே
நாதனவன் பெருமையெலாம் நெஞ்சுருகிடவே - சொல்லும்
நாலாயிர பாசுரங்கள் நினைத்திடுவோமே
போதகனாய் பார்த்தனுக்கு போர்க்களம் தன்னில் - சொன்ன
பாதையிலே நாம்நடந்து பேறடைவோமே
மாதவனின் அடிவணங்கி வாழ்ந்திடுவோமே அந்த
மலர்மகளின் அருள்மழையில் நனைந்திடுவோமே
இரும்பு துண்டை காந்தமது இழுப்பதுபோலே - உந்தன்
திருநாமம் கொண்டுயெனை ஈர்த்திடுவாயே
கரும்பை யொத்த இணையடிகள் கொடுத்து நீயுமே - என்
கண்ணீரை துடைத்தெனையும் காத்திடிடுவாயே
மாதவனின் அடிவணங்கி வாழ்ந்திடுவோமே அந்த
மலர்மகளின் அருள்மழையில் நனைந்திடுவோமே