சமயபுரம்
மாரியம்மா – தெரிசனம்
தந்துவிட
வாடியம்மா
உமையவளே
என்கொறைங்கள – உனக்கு
தீர்ப்பதொரு
காரியமா? (2)
ஆடிமாசம்
வந்தவுடன்
ஆத்தாமொகம்
காணவேண்டி
ஓடியிங்கு
வந்தேனம்மா – ஒன்புகழ
பாடயிங்கு
வந்தேனம்மா
ஆத்தா
(சமயபுரம் .... (1)
பாழும்மனசு
கவலையெல்லாம்
பஞ்சுபோல
பறந்துபோக
கூழூத்த
வந்தேனம்மா – மனங்குளிர
குடிசுப்புட்டு
போடியம்மா
ஆத்தா
(சமயபுரம் .... (1)
எங்ககுலம்
தழச்சிடவே
சந்தோசம்
பொங்கிடவே
பொங்கலத்தான்
படயலிட்டோம் – அம்மா
பாசத்தோட
ஏத்துக்கடி
ஆத்தா
சமயபுரம்
மாரியம்மா – தெரிசனம்
தந்துவிட
வாடியம்மா
உமையவளே என்கொறைங்கள
– உனக்கு
தீர்ப்பதொரு
காரியமா? (2)
No comments:
Post a Comment