Wednesday, May 21, 2014

Parvati - சமயபுரம் மாரியம்மா

சமயபுரம் மாரியம்மா தெரிசனம்
தந்துவிட வாடியம்மா
உமையவளே என்கொறைங்கள உனக்கு
தீர்ப்பதொரு காரியமா? (2)

ஆடிமாசம் வந்தவுடன்
ஆத்தாமொகம் காணவேண்டி

ஓடியிங்கு வந்தேனம்மா ஒன்புகழ
பாடயிங்கு வந்தேனம்மா

ஆத்தா
  (சமயபுரம் .... (1)

பாழும்மனசு கவலையெல்லாம்
பஞ்சுபோல பறந்துபோக

கூழூத்த வந்தேனம்மா மனங்குளிர
குடிசுப்புட்டு போடியம்மா

ஆத்தா
  (சமயபுரம் .... (1)

எங்ககுலம் தழச்சிடவே
சந்தோசம் பொங்கிடவே

பொங்கலத்தான் படயலிட்டோம் அம்மா
பாசத்தோட ஏத்துக்கடி

ஆத்தா

சமயபுரம் மாரியம்மா தெரிசனம்
தந்துவிட வாடியம்மா
உமையவளே என்கொறைங்கள உனக்கு

தீர்ப்பதொரு காரியமா? (2)

No comments:

Post a Comment