ஸ்ரீ ரங்க தர்சனம்
கோடி கோடி புண்ணியம்
அண்ணல் பார்வையில் எண்ணம் பலிதம்
இதுவே சத்தியம் என்றும்
அவனே நித்தியம்
காவிரி நதியில் குளித்து எழுந்தால் அதுவே புண்ணியம்
கோயில் மணியின் ஓசை கேட்டால் அதுவும் புண்ணியம்
ஆவி குளிர்ந்து அரங்கனைக் கண்டால் மிகவும் புண்ணியம்
ஒருமுறையேனும் தரிசனம் செய்ய ஜென்ம சாபல்யம்
ஸ்ரீ ரங்க தர்சனம்
கோடி கோடி புண்ணியம்
அண்ணல் பார்வையில் எண்ணம் பலிதம்
இதுவே சத்தியம் என்றும்
அவனே நித்தியம்
திருமுக அழகில் உள்ளம் லயித்தால் அதுவே புண்ணியம்
திவ்விய மேனி அழகினைக் கண்டால் அதுவே புண்ணியம்
திருவடி இணையை துணையாய்க் கொண்டால் அதுவே புண்ணியம்
ஒருமுறையேனும் தரிசனம் செய்ய ஜென்ம சாபல்யம்
ஸ்ரீ ரங்க தர்சனம்
கோடி கோடி புண்ணியம்
அண்ணல் பார்வையில் எண்ணம் பலிதம்
இதுவே சத்தியம் என்றும்
அவனே நித்தியம்
No comments:
Post a Comment