Thursday, May 1, 2014

Shiva - மயிலை என்னும் திருத்தலமாம்

மயிலை என்னும் திருத்தலமாம்
மனதிற் குகந்தத் திருத்தலமாம்
கயிலை நாதன் உடனுறைய
கற்பகம் ஆளும் திருத்தலமாம்

(மயிலை என்னும்)

அத்தனின் ஞான அருளுரையில்
சித்தம் செலுத்தத் தவறியதால்
புன்னை வனத்தில் மயிலாக
அன்னை பிறந்திடச் சபித்தாரே

(மயிலை என்னும்)

அன்னை பூமியில் பிறந்தாளே
அத்தனை வணங்கி இருந்தாளே
அண்ணல் அருளில் மனமிரங்கி
அவளைச் சேர்ந்தான் இறுதியிலே .

(மயிலை என்னும்)

பாம்புக் கடியால் உயிர் துறந்த
பூம்பாவை எனும் சிறுமி வுயிர்
சாம்பலில் இருந்து உயிர்பித் தான்
ஞானக் குழந்தை இவ்விடமே

(மயிலை என்னும்)


No comments:

Post a Comment