மலைபல நான் கண்டேன் - உன்
மலைபோல் கண்டதில்லை
உலகினில் தெய்வங்கள் - இங்கு
உனைப் போல் வேறில்லை (2)
உனைக் காணும் ஆசையிலே –
இருமுடியை தாங்கி வந்தேன்
மனக் குறைகள் தீர்ந்திடவே
குருவடியை நாடி வந்தேன்
கனிமுகம் நான் கண்டேன் – பிரபு
கருணையின் நீ எல்லை
மலைபல நான் கண்டேன் - உன்
மலைபோல் கண்டதில்லை
தரிசனமும் கிடைத்த தடா - என்
கண்களும் குளிர்ந்த தடா
கரும்பைத் தின்றது போலே - என்
இதயமும் இனித்த தடா
வரும் வருடமும் இதுபோல - நீ
வரம்தர வேண்டு மடா
மலைபல நான் கண்டேன் - உன்
மலைபோல் கண்டதில்லை
உலகினில் தெய்வங்கள் - இங்கு
உனைப் போல் வேறில்லை
No comments:
Post a Comment