Wednesday, May 21, 2014

Baba - சீரடி ராஜா பதில் சொல்லு


சீரடி ராஜா பதில் சொல்லு
சீக்கிர மெனக்கு பதில் சொல்லு
ஓடிவந்தேனே உனை நம்பி
உண்மையை எனக்கு நீ சொல்லு  

உன்தரி சனம்நான் கண்டிடவே
இருமுறை சீரடி வந்தேனே
என்வீட்டிற்கு எனைத் தேடி
ஒருமுறையேனும் வந்தாயா

சீரடி ராஜா பதில் சொல்லு
சீக்கிர மெனக்கு பதில் சொல்லு
ஓடிவந்தேனே உனை நம்பி
உண்மையை எனக்கு நீ சொல்லு 

சின்னஞ் சிறிய வீடென்று
சாயி நீயும் நினைத்தாயோ
தின்ன எதுவும் தரமாட்டேன்
என்றே நீயும் பயந்தாயா
உன்நிலைமைக்கு நான் ஈடு
இல்லை என்று  நினைத்தாயோ
என்வீட்டிற்கு எனைத் தேடி
ஒருமுறையேனும் வந்தாயா

மதியா தாரின் வீட்டிற்கு
எவரும் இங்கே செல்வதில்லை
எதிரியா நானும் தெரியவில்லை
என்வீட்டிற்கேன் வரவில்லை




No comments:

Post a Comment