நெற்றியிலே
நிலவணிந்த நாகபூஷ ணன்னிவன்
எட்டுதிக்கை
அணிந்தவன் யோகியர்கள் புகழ்பவன்
இந்திரன்ப
ணிந்தபாத தாமரைகள் நாடுவோம்
காசிஆளும் காலபைர
வன்புகழைப் பாடுவோம்
சூலம்கொண்ட
வன்கோடி சூரியன்போ லொளிர்பவன்
நீலகண்டன்
நெற்றியிலும் நயனமோடு திகழ்பவன்
காலனுக்கு காலனான
வன்பதங்கள் நாடுவோம்
காசிஆளும் காலபைர
வன்புகழைப் பாடுவோம்
அழிவிலாத
வன்நோய்கள் அண்டிடாத நாயகன்
அன்பர்பிறவிப்
பிணிகளை அன்புடனே தீர்ப்பவன்
ஊழித்தாண்ட
வப்ரியன் மூவரிலே முதல்வனாம்
காசிஆளும் காலபைர
வன்புகழைப் பாடுவோம்
முக்திதருப
வன்னிவன் பக்தவத்ச லன்சிவன்
மூவுலகச் செல்வமொரு நொடியினிலே தருபவன்
சித்சபையி
லாடும்திருப் பாதங்களை நாடுவோம்
காசிஆளும் காலபைர
வன்புகழைப் பாடுவோம்
தர்மரக்ஷ
கன்னிவன் அதர்மபாதை அழிப்பவன்
தாயாக
நம்மைக்காக்க தூங்காது விழிப்பவன்
கர்மதளை
அறுப்பவன் தீச்செயல்கள் வெறுப்பவன்
காசிஆளும் காலபைர
வன்புகழைப் பாடுவோம்
No comments:
Post a Comment