பெரும் புத்தூர் மன்னவா உன்
பெருமைநான் சொல்லவா
தானே உகந்த திரு மேனி
கொண்டே இங்கு அருளே நீ
பிறந்தாய் அமர்ந்தாய் மனதைக் கவர்ந்த
பெரும் புத்தூர் மன்னவா உன்
பெருமைநான் சொல்லவா
நாவுரைக்க எந்தன் மனமுரைக்க
நெகிழ்ந்து நெகிழ்ந்து அது தினமுரைக்க
நோய்கள் மறைந்து உடல் சிலிர்த்திருக்கும் உனை
நாடும் உயிர்கள் என்றும் சிரித்திருக்கும்
வாழ்வின் இலக்குன் மலரடி தானே
பெரும் புத்தூர் மன்னவா உன்
பெருமைநான் சொல்லவா VRI
No comments:
Post a Comment