Friday, July 4, 2014

Baba - கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை

கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை
கண்களில் தெரிந்தது சீரடி பாதை
உவகையில் குதிக்குது அடியவர்  மனது
இனியும் வருகின்ற நாட்களும் இனிது .

இராமன் என்பதும் அவனே இங்கு
சாயி ஆனவன் சிவனே ((2))

சாயி ராமனின் பாதம் பணிந்தால் துன்பங்கள் விலகும்
பாபா என்று பக்தியில் அழைத்தால் பாதையும் தெரியும் (2)

நமது பார்வையில் வெளிச்சம் சேர்த்து
தமது கையில்நம் கையினைக் கோர்த்து

சாயி காட்டுவான் பாதை - அவனது
சொற்கள் அனைத்துமே கீதை (2)

(கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை )

நினைவில் அவனை நிறுத்திடு அவனே நமக்கிங்கு சிவனாம்
அனுதினம் அவன்பெயர் சொல்லிடு அதுநீ செய்யும் தவமாம் (2)

மற்ற உயிருக்கு துன்பம் தராது
பற்றும் அறுந்தால் துயரம் வராது

இல்லை ஒன்றுமே தேவை - நம்மை
காத்து நிற்கும் அவன் பார்வை (2)

(கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை )

Based on the tune of Iravukku Pagalukkum iniyenna velai? song.

Thursday, July 3, 2014

Ramanuja - உடையவரை நானும் நாடி வந்தேன்

உடையவரை நானும் நாடி வந்தேன்
உடையவர்தான் என்று ஆகி நின்றேன்
பெரும்புத்தூர் தலத்தினுக்கு பெருமை சேர்த்தவன்
பாஷியத்தால் உலகினரை தன்பால் ஈர்த்தவன்

உடையவரை நானும் நாடி வந்தேன்
உடையவர்தான் என்று ஆகி நின்றேன்
வைணவமாம் மரத்தினுக்கு தண்ணீர் ஊற்றினான்
வைகுண்டம் செல்வதற்கு வழியைக் காட்டினான்

(உடையவரை நானும் நாடி வந்தேன் )

வேதாகமம் பாடும் அந்த நாரணன் பாயானான்
பாத மலர்பணிந்த எனக்கு அவனே தாயானான்
என் நெஞ்சில் நான் அவனை எண்ணி உருகா நாளில்லை
கண்களிலே அவன் உருவை வைத்து பார்க்கா பொழுதில்லை

கண்ணீர் அவன் துடைத்தான்
கவிதை அவன் கொடுத்தான் (2)

அவன் பாதத்தில் என் பாடல்கள்
என்றும் அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணம்

(உடையவரை நானும் நாடி வந்தேன்)

மதில் மேல் ஒரு பூனை போல நானும் வாழ்ந்தேனே
முடியாத தோர் உலக சுகத்தில்  நானும் ஆழ்ந்தேனே

அவனாக எனைத்தேடி வந்து என்னை ஆண்டவன்
அவனின்றி குருவில்லை நானும் உறுதி பூண்டவன்

வழியை அவன் கொடுத்தான்
ஒளியும் அவன் கொடுத்தான் (2)

அவன் காட்டிய நல் பாதையில்
நானும் செல்லுவேன் செல்லுவேன் செல்லுவேன்

(உடையவரை நானும் நாடி வந்தேன்)