Thursday, May 29, 2014

Ramanuja - ஸ்ரீ எத்திராஜனந் தாதிபாடினால்

ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்  மனதில் அமைதி மேவும் அதன்
எதுகை மோனைகள் இயைபு கற்றிட தமிழில் அறிவு கூடும்

அமுதனா ரோதிய உடையவர் பெருமைகள்
என்றுமே போற்றிட வேண்டிய உடமைகள்
தமிழெனும் கன்னியின் தலையலங் காரமே
தமிழருக் கிதுவென்றும் ஒருஅகங் காரமே

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

(ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்)

கானகம் சென்று அமர்ந்திட வேண்டாம்
கடுந்தவம் செய்து களைத்திட வேண்டாம்
வீணிலே அலைந்து வியர்த்திட வேண்டாம்
வெந்தழல் நெய்யென உருகிட வேண்டாம்

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

(ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்)

நானெனும் அகந்தை நமைவிட்டு நீங்கிடும்
நம்பெருமாள் மேல் நம்பிக்கை ஓங்கிடும்
ஓதிட தினமும் பாவங்கள் குறைந்திடும்
பாற்கடல் பாதை பார்வைக்குத் தெரிந்திடும்

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்  மனதில் அமைதி மேவும் அதன்
எதுகை மோனைகள் இயைபு கற்றிட தமிழில் அறிவு கூடும்

No comments:

Post a Comment