மனமே மனமே துதித்திடு தினமே
ஜய ஸ்ரீ சாயி ராம்
தினம்பேர் சொல்ல திருவருள் வருமே
ஒம் ஸ்ரீ சாயி ராம்
-----------------------------------------------
ஷிர்டியின் ஒவ்வொரு கல்லும் சொல்லும்
ஜய ஸ்ரீ சாயி ராம்
குருவுரு வம்மனம் கொள்ளை கொள்ளும்
ஒம் ஸ்ரீ சாயி ராம்
சிந்தனை எல்லாம் அவனே அவனே
ஜய ஸ்ரீ சாயி ராம்
எந்தை அவனே அன்னையு மவனே
ஒம் ஸ்ரீ சாயி ராம்
தேவனின் நாமம் திருமறைச் சாரம்
ஜய ஸ்ரீ சாயி ராம்
தூயவன் திருவடி மோக்ஷ விஹாரம்
ஒம் ஸ்ரீ சாயி ராம்
அன்பால் நம்மை அணைத்திடு வானே
ஜய ஸ்ரீ சாயி ராம்
அனுதினம் நம்நலன் நினைத்திடு வானே
ஒம் ஸ்ரீ சாயி ராம்
------------------------------------------------
அய்யன் இன்றியோர் தெய்வம் இல்லை
ஜய ஸ்ரீ சாயி ராம்
பொய்யில் லையிது மெய்யே மெய்யே
ஒம் ஸ்ரீ சாயி ராம்
பேதம் காணா பேரருள் அவனது
ஜய ஸ்ரீ சாயி ராம்
பாதம் அவனது என்கதி என்கதி
ஒம் ஸ்ரீ சாயி ராம்
ஞானம் அருளும் நாதன் அவனே
ஜய ஸ்ரீ சாயி ராம்
ஈனம் போக்கும் ஈசனும் அவனே
ஒம் ஸ்ரீ சாயி ராம்
அகிலம் எல்லாம் அவனே காப்பான்
ஜய ஸ்ரீ சாயி ராம்
சகலமும் அவனே சத்தியம் அவனே
ஒம் ஸ்ரீ சாயி ராம்
இருளது நீக்கும் திருவருள் தருவான்
ஜய ஸ்ரீ சாயி ராம்
குருவடி சரணம் குருவடி சரணம்
ஒம் ஸ்ரீ சாயி ராம்
-------------------------------------------------------
No comments:
Post a Comment