Sunday, May 11, 2014

Vishnu - மாதவன் நாமம்

மாதவன் நாமம் மனதில் வைத்தால்
மரணத்தின் பயத்தை வென்றிடலாம்
வாழ்க்கைப் பயணம் முடிந்தபின்னாலே
வைகுண்டம் நாம் சென்றிடலாம்

(மாதவன் நாமம்)

செல்வத்தைத் தேடி ஓடிடும் மனமே
சீக்கிரம் உனக்குத் தெரிந்து விடும்
இல்லை அதனால் ஒரு பயனென்று
உனக்கும் ஒருநாள் புரிந்து விடும்

(மாதவன் நாமம்)

மேனியின் அழகில் மாய்ந்து கிடக்கும்
மனமே உனக்கும் புரிந்து  விடும்
ஊனும் உயிரும் பிரிந்த பின்னாலே
என்ன பெயரென்று தெரிந்து விடும்

(மாதவன் நாமம்)

உற்றமும் உறவும் எல்லாம் இங்கு
உள்ளது வரையில் கூடி வரும்
கட்டையில் உடலைக் கிடத்தும் போது
காட்டில் விடுத்து ஓடி விடும்

(மாதவன் நாமம்)

உலகச் சந்தை சிலநாள் மட்டும்
என்பதும் உனக்குப் புரிந்து விடும்
மலரும் மாலைக் குள்ளே வாடும்
உண்மை உனக்குத் தெரிந்து விடும்

(மாதவன் நாமம்)

புரிந்து கொண்டவன் பெயரை எடுத்தவர்
பாற்கடல் தாண்டிச் சென்றி டுவார்
அரியின் பெயரை எடுக்கா தவரோ
இன்னொரு பிறவியைப் பெற்றி டுவார்

(மாதவன் நாமம்)

No comments:

Post a Comment