எல்லாம் வல்லவனும் உன்மீதே உறங்கிடுவான்
அல்லவோ ? நீயவன்தன் தாயோ? - அல்லல்படும்
சிறியவனைக் காக்கநீ திருவுளம் கொள்வாயோ?
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
உன்பெயர் சொல்லா என்பாட்டும் ஒருபாட்டோ?
நின்னருளை பாடவே தமிழறிந்தேன் - எந்நாளும்
தரித்திரம் நோய்நீங்க தரவேணும் அபயஹஸ்தம்
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
அன்றும் இன்றும் உனையே நினைத்திருந்தேன்
என்றுமுனை மறவேன் அருளாளா - கன்றுநான்
அரவணைக்கும் பசுவான என்னன்னை நீயே!
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
அன்பருக்கு மட்டுமே உனதருள் என்றாலென்
போன்றோர் எங்குதான் போவார்?- முன்னர்தன்
உருவை தானுகந்தாய் இன்று எனைஉகப்பாய்
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
ஆறுதலை தரவேன் அழிச்சாட்டியம்? அருட்சொல்
கூறுதலுக் குனையன்றி யாருளர்? - மாறுதலை
விரும்பியே வினையறுக்கும் மலரடி பணிந்தேன்
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
அல்லவோ ? நீயவன்தன் தாயோ? - அல்லல்படும்
சிறியவனைக் காக்கநீ திருவுளம் கொள்வாயோ?
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
உன்பெயர் சொல்லா என்பாட்டும் ஒருபாட்டோ?
நின்னருளை பாடவே தமிழறிந்தேன் - எந்நாளும்
தரித்திரம் நோய்நீங்க தரவேணும் அபயஹஸ்தம்
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
அன்றும் இன்றும் உனையே நினைத்திருந்தேன்
என்றுமுனை மறவேன் அருளாளா - கன்றுநான்
அரவணைக்கும் பசுவான என்னன்னை நீயே!
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
அன்பருக்கு மட்டுமே உனதருள் என்றாலென்
போன்றோர் எங்குதான் போவார்?- முன்னர்தன்
உருவை தானுகந்தாய் இன்று எனைஉகப்பாய்
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
ஆறுதலை தரவேன் அழிச்சாட்டியம்? அருட்சொல்
கூறுதலுக் குனையன்றி யாருளர்? - மாறுதலை
விரும்பியே வினையறுக்கும் மலரடி பணிந்தேன்
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!
No comments:
Post a Comment