குடி இருக்கும் இடத்தில் சாயி
உன் கோவில் வர வேண்டும்
நான் கதவுகளை திறந்தால்
உன் தரிசனம் பெற வேண்டும்
(குடி இருக்கும் இடத்தில் சாயி)
அடிக்கும் மணியைக் கேட்டு
என் உறக்கம் கலைய வேண்டும்
உன் அழகிய திருமுகத்தில் இரு
விழியும் திறக்க வேண்டும்
(குடி இருக்கும் இடத்தில் சாயி)
தினம் வந்து போகையில் நான்
உன் திருவடி தொழ வேண்டும்
தயை பெருகும் உன் விழியில்
நான் அடிக்கடி விழ வேண்டும்
நினைத்து நினைத்து உன்னை என்
நெஞ்சும் உருக வேண்டும் அந்த
நினைப்பில் இரண்டு கண்ணும்
கண்ணீரில் நனைய வேண்டும்
(குடி இருக்கும் இடத்தில் சாயி)
அருகருகே குடியிருந்தால் என்
வீட்டுக்கு வர வேண்டும்
இருவருக்கும் இடையிலே ஓர்
நட்பு மலர வேண்டும்
தினம் வந்து போகையில் நான்
உன் திருவடி தொழ வேண்டும்
தயை பெருகும் உன் விழியில்
நான் அடிக்கடி விழ வேண்டும்
(குடி இருக்கும் இடத்தில் சாயி)
No comments:
Post a Comment