சாத்திரங்கள்
எனும்பொன் நிதியை - இங்கு
காத்திட வந்த
பரம் பொருளே
பூத்த மலர்பதங்
கள் பணிந்தேன் - என்
பாவங்கள்
தீர்ந்திட வர மருளே
ஜனனம் மரணம்
என்னும் சுழலினிலே - சிக்கி
தவித்திடும்
பாலனைக் காத்திடுவாய்
கனிவேவடி வானவென்
சங்கரனே - உன்
அடிநிழ லில் எனை
வைத்திடுவாய்
உன்னுரு கண்டவர்
தன்னுடையத் - துயர்
விலகியே இன்ப
மடைந் திடு வார்
என்னுளும்
மறையொளி பாய்ச்சி டுவாய் - இந்தப்
பிறவிக் கடல்தனை
கடந்திடுவேன்
நீஅவனே சிவனே
எனும் உண்மைதனை - நான்
நெஞ்சினி லின்று
உணர்ந்து கொண்டேன்
பூமியிலே உள்ள
குருக்களிலே - நீ
சூரியன் என்றுமே
தெரிந்து கொண்டேன்
கல்வியோ செல்வமோ
எனக்கு இல்லை - உந்தன்
கமலபதம் நம்பி
நானும் வந்தேன்
எல்லை யில்லா
மகிழ்ச்சிக் கடலில் - நான்
அனுதினம்
ஆழ்ந்திட அருள் புரிவாய்
No comments:
Post a Comment