Wednesday, May 21, 2014

Mahaperiyavar - சாத்திரங்கள் எனும்பொன் நிதியை

சாத்திரங்கள் எனும்பொன் நிதியை - இங்கு
காத்திட வந்த பரம் பொருளே
பூத்த மலர்பதங் கள் பணிந்தேன் - என்
பாவங்கள் தீர்ந்திட  வர மருளே

ஜனனம் மரணம் என்னும் சுழலினிலே - சிக்கி
தவித்திடும் பாலனைக் காத்திடுவாய்
கனிவேவடி வானவென் சங்கரனே - உன்
அடிநிழ லில் எனை வைத்திடுவாய்

உன்னுரு கண்டவர் தன்னுடையத் - துயர் 
விலகியே இன்ப மடைந் திடு வார்
என்னுளும் மறையொளி பாய்ச்சி டுவாய் - இந்தப்
பிறவிக் கடல்தனை கடந்திடுவேன்

நீஅவனே சிவனே எனும் உண்மைதனை - நான்
நெஞ்சினி லின்று உணர்ந்து கொண்டேன்
பூமியிலே உள்ள குருக்களிலே - நீ
சூரியன் என்றுமே தெரிந்து கொண்டேன்

கல்வியோ செல்வமோ எனக்கு இல்லை - உந்தன்
கமலபதம் நம்பி நானும் வந்தேன்
எல்லை யில்லா மகிழ்ச்சிக் கடலில் - நான்

அனுதினம் ஆழ்ந்திட அருள் புரிவாய் 

No comments:

Post a Comment