Wednesday, May 21, 2014

Shiva - உண்டுறங்குவ தல்லாது

உண்டுறங்குவ தல்லாது ஒருபய னில்லாத
ஒரு வாழ்க்கை இங்கு எனது.
மூவாசை என்னும் சுழலிலே சிக்கி 
அலைக்கழிந்தது எந்தன் மனது.

நானுன் மகனன்றோ? என்துயர் உனதன்றோ? உன்கருணை எனக்கு இல்லையோ?
ஊரறிய மனைவிக்கு ஒருபாகம் தந்தாய்நீ 
எனைக்காக்கும் கடமை இல்லையோ?

அண்ட சராசரங்கள் உண்டாக்கிய உனக்கு 
என்குறைகள் தீர்ப்ப தரிதோ ? 
ஈசனே மீனாளின் ராசனே மதுரையை  
அரசாளும்  சொக்கேசனே!


No comments:

Post a Comment