Wednesday, May 21, 2014

Parvati - மனதில் உறுதி நீ தரவேண்டும் தாயே

மனதில் உறுதி நீ தரவேண்டும் தாயே
எனக்கு இருளில் நீ வழிகாட்டு வாயே
உனது பாதங்கள் பிடித்தேனே நானும்
மனக் கிலேசங்கள் நீமாற்று வாயே

(மனதில் உறுதி ...)

என் அறியாமை எனை விட்டு போக
என் உள்ளே நீ விளக்கேற்று வாயே
புன் நெறி தன்னில் செல்கின்ற என்னை
பாச உணர்வோடு தடுத்தாளு வாயே

உன் அருளாலே துன்பங்கள் விலகும்
நாளை எனக்கென்று நன்றாக மலரும்
உனது பாதங்கள் பிடித்தேனே நானும்
மனக் கிலேசங்கள் நீமாற்று வாயே

(மனதில் உறுதி ...)

நானென்ன நன்மைகள் செய்தேன்
நாட்டுக்கு நலனென்ன செய்தேன்
தானென்ற எண்ணத்தில் வாழ்ந்தேன்
தவறான செயலாலே தாழ்ந்தேன்

நீ மன்னித்து எனை ஏற்றுக் கொள்வாய்
அடி நிழல் தந்து எனைக் காத்து நிற்பாய்
உனது பாதங்கள் பிடித்தேனே நானும்
மனக் கிலேசங்கள் நீமாற்று வாயே

மனதில் உறுதி நீ தரவேண்டும் தாயே
எனக்கு இருளில் நீ வழிகாட்டு வாயே
உனது பாதங்கள் பிடித்தேனே நானும்
மனக் கிலேசங்கள் நீமாற்று வாயே


No comments:

Post a Comment