அகல்களில் எண்ணை
வார்ப்போம்
அண்ணலே எனையாளும்
ஐய
அகத்தினில் உன்னை
வார்ப்போம்
அருமறை ஆகமங்க
ளெல்லாம்
புகன்றநின்
பெயரைப் புகழைப்
புந்தியில்
பூட்டியே வைப்போம்
உகந்தருள்
புரிந்திடவே இன்று
அகல்தனில்
ஒளியாய் வருவாய்
கண்ணால் உன்னைக்
காண
கரங்களால் உனை
தொழுதிட
பண்களில்
பாக்களில் உன்னை
பெருமையாய்
பாடிடும் படிக்கு
பண்ணுவாய் இந்தப்
பாவியின்
பாறாங்கல் இதய
முருக
அண்ணா மலையான
ஒளியே
அன்புடன் நீயருள்
வாயே
No comments:
Post a Comment