Wednesday, May 21, 2014

Iyappan - கார்த்திகையில் மாலையினை நாமணிவோமே

கார்த்திகையில் மாலையினை நாமணிவோமே அந்த
காடுநதி கடந்தவனின் தாள் பணிவோமே
ஆறுவாரம் நேர்த்தியாக நோன்புகள் இருந்து அந்த
ஹரிஹரனின் நாமத்திலே மனம் கனிவோமே

கேட்கும்வரம் அள்ளித்தரும் வள்ளலல்லவா அவன்
கொஞ்சுமழகு உருவங்கொண்ட பிள்ளையல்லவா
பாட்டெழுதும் சிறுவனுக்குத் தந்தையல்லவா என்னை
பாதம்பணிய வைத்ததொரு விந்தை ல்லவா

இருமுடியை பக்தியுடன் தலையினில் சுமந்து உன்
ஈரொன்பது படியேற ஆசையுங் கொண்டேன்  
குருவடிவே குழந்தையெந்தன் கைகளைப்பிடித்து என்
கூடவந்து வழிகாட்டி காட்சியும் தருவாய் 


No comments:

Post a Comment