கார்த்திகையில்
மாலையினை நாமணிவோமே – அந்த
காடுநதி
கடந்தவனின் தாள் பணிவோமே
ஆறுவாரம் நேர்த்தியாக
நோன்புகள் இருந்து – அந்த
ஹரிஹரனின் நாமத்திலே
மனம் கனிவோமே
கேட்கும்வரம்
அள்ளித்தரும் வள்ளலல்லவா – அவன்
கொஞ்சுமழகு உருவங்கொண்ட
பிள்ளையல்லவா
பாட்டெழுதும் சிறுவனுக்குத்
தந்தையல்லவா – என்னை
பாதம்பணிய
வைத்ததொரு விந்தை ல்லவா
இருமுடியை
பக்தியுடன் தலையினில் சுமந்து – உன்
ஈரொன்பது படியேற ஆசையுங்
கொண்டேன்
குருவடிவே
குழந்தையெந்தன் கைகளைப்பிடித்து – என்
கூடவந்து
வழிகாட்டி காட்சியும் தருவாய்
No comments:
Post a Comment