Wednesday, May 21, 2014

Parvati - கருமாரி வாடி மகமாயி வாடி

அன்புக்கு மறுபேரு மாரி
இங்க அவ பேரு கரு மாரி
எங்க கொலம் காத்து நிக்கும் சாமி
இவ இல்லேனா சுத்தாது பூமி

ஆத்தா

கருமாரி வாடி
மகமாயி வாடி உன்
கருணையிங்க மழையாக
வர்ற மாரி வாடி

உஞ்சூடு தணியத்தானே
கூழ வச்சோம் நாங்க
கூழ வச்சோம்
உன்னநம்பி பூமிதியில்
கால வச்சோம் நாங்க
கால வச்சோம்

சினம்விட்டு சிரிச்சிபுடு
பிழைபொறுத்து  மழையகுடு

(கருமாரி வாடி)

மழையில்லாம நிலங்களெல்லாம்
பாழாச்சுடி தாயே
பாழாச்சுடி
பச்ச பச வயலப் பாத்து
நாளாச்சுடி ரொம்ப
நாளாச்சுடி

மாரியின்னா ஒம் பேரு
மழைக்குமது தான் பேரு


(கருமாரி வாடி) 

No comments:

Post a Comment