Wednesday, May 21, 2014

Vishnu - அரங்கன் கோயில் மணியோசை

அரங்கன் கோயில்  மணியோசைக் கேட்டது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
அதிகாலை வேளையில் அருளோசை கேட்டது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
உறக்கம் கலைத்தது அன்பான  மணியோசை
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
எழுந்திடு என்றண்ணல் குரலுமே கேட்டது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

திவ்யப் பிரபந்தமென் காதெலாம் நிறைத்தது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
துளசியின் வாசனை மனமெலாம் நிறைத்தது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
கவ்விய இருளும் கணத்திலே அகன்றது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
கண்ணில்நீர் வழிந்திட கரங்கூப்பி நின்றேன்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஆறாக பெருகும் அரங்கனின் அருளிங்கு
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
அவனருளாலே அகலுமே துன்பங்கள்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பூரணன் அருளாலே பூமியெலாம் செழிக்கும்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
படிப்பவர் கேட்பவர் அனைவரின் மனதிலும்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே


No comments:

Post a Comment