வெண்ணை யுண்ட கண்ணனை நாம் போற்றுவோம் - நம்
எண்ணத்த திலே அவன் உருவை ஏற்றுவோம்
பைந் தமிழில் பாடல்கள் நாம் பாடுவோம் - அவன்
பாதங்களில் பக்தியுடன் சூட்டுவோம்
காணும் கண்ணில் கலந்து நிற்கும் கண்ணனே - உனைப்
பாடும் எனக்கு தமிழ் தருவாய் மன்னனே
வேணு கானம் காதில் கேட்கும் போதிலே – எங்கள்
வேதனைகள் குறையுதடா நொடியிலே
போர்க்களத்தில் அன்றுசொன்ன கீதையே – நாங்கள்
பூவுலகில் வாழநல்ல பாதையே
ஆர்ப்பரிக்கும் ஆசைகளை அடக்கிட – அதை
எங்கள் வாழ்வின் அங்கமாக ஆக்குவோம்
No comments:
Post a Comment