Wednesday, May 28, 2014

Baba - சாயியெனும் தெய்வம்

சாயியெனும் தெய்வம் சீரடியில் நமக்கு
காவலென இருக்க கவலைகள் எதுக்கு?

(சாயியெனும் தெய்வம்)

குழந்தைகளை அன்னை காப்பதுபோல் நம்மை
காத்திடுவான் சாயி கணக்குக்கவன் தாயி 

(சாயியெனும் தெய்வம்)


அவனைவிட எளிய இறையொன்றும் இல்லை
தயவினுக்கு அவனே தரணியிலே எல்லை

(சாயியெனும் தெய்வம்)


நாடி வரும் நெஞ்சைத் தேடி வரும் ஜோதி
பாடி வரும் எனக்கும் அவன் தருவான் நீதி

(சாயியெனும் தெய்வம்)


No comments:

Post a Comment