Monday, June 30, 2014

Baba - சீரடி கோவில் திருமணி ஓசை

செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று பாடல் மெட்டில் அமைந்தது


சீரடி கோவில் திருமணி ஓசை
காதில் விழுந்தது இன்று - நெஞ்சே
இன்றைய நாளும் நன்று

யாமிருக் கையிலே பயமிலை என்ற
வாக்கும் ஒலித்தது இன்று - நெஞ்சே
மங்கள நாளும் இன்று

திக்கற்று நானின்று தவித்திட்ட வேளை
ஓமென்ற ஒலி கேட்டது
அவன்குரலை செவி கேட்டது

சாயியவன் எந்தையவன்
தாயுமவன் தந்தையவன்

என் வாழ்வில் ஒளியேற்றினான்
எப்பொழுதும் காப்பாற்றுவான்

(சீரடி கோவில் திருமணி ஓசை)

கனிவான பார்வைகள் நமக்காக உண்டு
சிரம்மீது கரங்கள் உண்டு
கரம்மீது வரங்கள் உண்டு

தீனருக்கு உதவிடவே
பூமிதனில் அவதரித்தான்

நம் வாழ்வில் ஒளியேற்றினான்
எப்பொழுதும் காப்பாற்றுவான்

(சீரடி கோவில் திருமணி ஓசை)

Friday, June 27, 2014

Baba - சீரடிசெல்லும் பாதையிலே



சீரடிசெல்லும் பாதையிலே என் சிந்தையும் இருக்கிறது - அங்கு
ஆட்சி புரியும் அண்ணலைக் காண இதயமும் துடிக்கிறது

(சீரடிசெல்லும் பாதையிலே)

ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
மானுடம் வாழ மண்மேல் வந்த மன்னவன் நகரல்லவா – அவர்
வாழ வைக்கும் காவல் தெய்வம் அன்னைக்கு நிகரல்லவா

(சீரடிசெல்லும் பாதையிலே)

என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
என்னுடன் நிஜத்தில் இருப்பது போலே  நானும் நினைக்கின்றேன்
என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
என்னுடன் நிஜத்தில் இருப்பது போலே  நானும் நினைக்கின்றேன்
சின்னவன் செய்த தவறுகள் பொறுத்து காத்திடவே வேண்டும் தினம்
நானும் உன்மேல் செந்தமிழ் பாடல் யாத்திடவே வேண்டும்

(சீரடிசெல்லும் பாதையிலே)

ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலின் மெட்டில் அமைந்தது.

Thursday, June 26, 2014

Baba - சீரடி என்னும் ஊரினிலே நம்

(காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல் மெட்டு)

சீரடி என்னும் ஊரினிலே நம்
சாயி பாபா இருக்கிறார்
தேடிவரும் தன் பக்தருக்கெல்லாம்
வரங்கள் தந்து மகிழ்கிறார்
வரங்கள் தந்து மகிழ்கிறார்

கதி இல்லாமல் வந்திடும் பேருக்கு
கட்டளை அவரும் தருகிறார்
கைவிரல் பிடித்து மையிருள் தன்னில்
கைவிரல் பிடித்து மையிருள் தன்னில்
கூடவே அவரும் வந்திடுவார்
கூடவே அவரும் வந்திடுவார்

(சீரடி என்னும் ஊரினிலே நம்  )

மறைகளை ஓதி பூஜைகள் செய்யும்
முறைகளுக் கவசியம் இல்லையே
இறைவனின் நாமம் ஒருமுறை சொல்ல
இறைவனின் நாமம் ஒருமுறை சொல்ல
அகலும் நமது தொல்லையே
அகலும் நமது தொல்லையே

வாட்டிடும் வறுமை விலகிட வேண்டி
தொழுவோம் நாமும் அவனடி
கேட்ட வரங்கள் கிடைத்திடும் நிச்சயம்
கேட்ட வரங்கள் கிடைத்திடும் நிச்சயம்
அதுதான் பாபா சன்னதி
அதுதான் சீரடி சன்னதி

(சீரடி என்னும் ஊரினிலே நம் )

Tuesday, June 24, 2014

Baba - சீரடியை நானும் நாடி வந்தேன்

(இனியவளே என்று பாடி வந்தேன் பாடல் மெட்டு)

சீரடியை நானும் நாடி வந்தேன்
சீரடிதான் என்று ஆகி நின்றேன்
தேடி வரும் அடியவரின் துயரம் தீர்ப்பவன்
நாடிடுவோர் இல்லங்களில் வளமை சேர்ப்பவன்

சீரடியை நானும் நாடி வந்தேன்
சீரடிதான் என்று ஆகி நின்றேன்
மன்னுயிரை தன்னுயிராய் என்றும் நினைப்பவன்
அன்னையென கரம்விரித்து நம்மை அணைப்பவன்

(சீரடியை நானும் நாடி வந்தேன்)

ஓராயிரம் பேரில் அவன் எனக்கே குருவானான்
பாடாத என் நாவில் வந்து பாட்டின் கருவானான்
அவன் பெயரில் நான் பாடும் பாட்டு என்றும் நன்மையே
அவனின்றி நானில்லை என்பதொன்றே உண்மையே

அவனால் தமிழ் அறிந்தேன்
அவனில் என்னை மறந்தேன் (2)

நெஞ்சீர்த்த்திடும் ஓர் பார்வையால்
என்னை வென்றவன் வென்றவன் வென்றவன்

(சீரடியை நானும் நாடி வந்தேன்)

பிடிவாதமா யிருந்த என்னை அவனும் கண்டானே
கடிவாளமும் போட்டு என்னை தன்னுள் கொண்டானே
அவன்தந்த இவ்வுயிரும் என்றும் அவனின் சொந்தமே
அவனின்றி எனக்கிந்த உலகில் இல்லை பந்தமே

அவனால் துயர் களைந்தேன்
அதனால் சுகம் அடைந்தேன் (2)

அவன் பாதங்கள் என் பாதையில்
என்றும் தோன்றுமே தோன்றுமே தோன்றுமே  VRI


Baba - சீரடியாம் திருத்தலம்தான் உன்னிடமோ

சீரடியாம் திருத்தலம்தான் உன்னிடமோ அது
தேடி வரும் அடியவர்க்கு பாற்கடலோ
பாடலொன்று நானெழுதி வந்திடுவேன் அதை
பாதத்தில் வைத்துசிரம் வணங்கிடுவேன்

(சீரடியாம் திருத்தலம்தான் )

வெறுங்கையுடன் அடியவர்கள் வந்திடுவார் அவர்
மனதினிலே சாயி தீபம் ஏற்றிடுவார்
அருளாலே அவர்கரங்கள்  நிறைத்திடுவாய் நீ
அலர்போலே அவர்நெஞ்சைப் பறித்திடுவாய்

(சீரடியாம் திருத்தலம்தான் )

பரிவுடனே திருத்திவிட்டாய் என்வழிகள் உன்
பக்தியிலே நனைந்ததெந்தன் இருவிழிகள்
அறிவுடனே பொருள்தந்து வாழ்வுதந்தாய் - உன்
அடியிணையில் என்சிரமும் தாழ்ந்திடுமே

(சீரடியாம் திருத்தலம்தான் )

வேறுபாதை போகின்ற அன்பருக்கும் அவர்
வாழ்வினிலே தீபமேற்றி ஒளிதருவாய்
பாரினிலே உனைப்போலே குருவில்லை நாம்
வேண்டும்வரம் தரும்கற்பக தருவில்லை


(சீரடியாம் திருத்தலம்தான் )

Vishnu - அலைமகள் நாயகனே

அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே
நிலையில்லா வாழ்வினிலே என்றும்
நின்னடி தான் புகலே
அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே

வேறார் எமை காக்க? இந்த
வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க
வேறார் எமை காக்க? இந்த
வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க
பாரா முகம் ஏனோ ?
பாரா முகம் ஏனோ ? உந்தன்
வாசலிலே நான் யாசித்தேன்
நிலையில்லா வாழ்வினிலே என்றும்
நின்னடி தான் புகலே
அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே

நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை
விட்டுவோர் தேவனை நானறியேன்
நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை
விட்டுவோர் தேவனை நானறியேன்
எத்தனை துன்பங்கள் வந்திடினும்
எத்தனை துன்பங்கள் வந்திடினும்- என்றும்
உன்பெயர் ஒன்றையே நானறிவேன்

அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே
நிலையில்லா வாழ்வினிலே என்றும்
நின்னடி தான் புகலே
அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே