அரங்கன் அன்பிற்கு அளவேது அவன்
பெருமைகள் பாடிட மொழியேது?
திருமகள் வருடியத் திருப்பாதம் - அதைச்
சரணடைந்தாலே அது போதும்
பாம்பணை மீது துயில்கொள்வான் - அவன்
பாற்கடல் மீது படுத்திருப்பான்
வேம்பெனக் கசக்கும் வாழ்க்கையுமே - அவன்
நாமத்தைச் சொல்ல இனித்திடுமே
(அரங்கன் அன்பிற்கு அளவேது)
கரங்கள் நான்கும் நான்மறைகள் - மலர்க்
கண்கள் தீர்க்கும் நம்குறைகள்
அரங்கன் நாமம் சொல்வாய்நீ - பிறவிக்
கடலைக் கடந்திட அதுதோணி
(அரங்கன் அன்பிற்கு அளவேது)
No comments:
Post a Comment