Sunday, April 6, 2014

Rama - இராம கீதை


பல்லவி

கடவுளரில் உன்னைப் போன்ற கடவுளில்லை
கதையேதும் உன்னுடைய கதை போலில்லை
விடையில்லாக் கேள்விகட்கு விடையாகினாய்
வினைப்பயனும் எமைத்தாக்க தடையாகினாய் 


சரணம் 1

பத்து அவதாரங்களில்  ஒன்றாகினாய்
மற்றவற்றை தாண்டிமிக நன்றாகினாய்
எத்தனை பாவங்கள் எமைச் சூழினும்
இங்கு எமைச் சூழினும்
ஒருமுறையுன் பேருரைக்க அதுவோடிடும்
விலகி அதுவோடிடும்

சரணம் 2

ஒற்றைச்சொல், பாணமில்லாள் என்றுலகில்
உனக்கென ஒருபாதை நீவகுத்தாய்
அத்தனே உன் வாழ்க்கை ஒரு பாடமே
நல்ல தொருபாடமே
உனைப்போல வாழ்ந்திடவே மனம் நாடுமே

எந்தன் மனம் நாடுமே

No comments:

Post a Comment